Thursday, January 27, 2011
ஆத்திசூடி - 25 -50
Wednesday, January 26, 2011
Tuesday, January 25, 2011
ஆத்திசூடி
Monday, January 24, 2011
Friday, January 14, 2011
Thursday, January 13, 2011
Wednesday, January 12, 2011
சென்னை புத்தகக் காட்சி - 2011
சென்னையில் புத்தக கண்காட்சி ஆண்டு தோறும் நடை பெறுகின்றது. இந்த வருடம் ஜனவரி 4 முதல் 17 வரை நடை பெறுகின்றது.மேலும் மாலை நேரங்களில் சான்றோர்களின் உரைகளும் நடை பெறுகின்றன. சென்ற ஞாயிறு அன்று நானும் சென்று இருந்தேன். அதை பற்றி சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். கிட்டத்தட்ட 463 புத்தக கடைகள் இருந்தன. 3 நுழைவு வாயில்கள் இருந்தன. இன்று புத்தகம் வாசிப்பது என்பது வெகுவாக குறைந்து விட்ட ஒன்று என நான் நினைத்தேன். ஆனால் அங்கு வந்த கூட்டத்தைபார்க்கும் பொழுது நாம் நினைத்தது தவறோ என எண்ணத் தோன்றுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் வந்து இருந்தனர். பொழுது போக்கிற்காக வந்துள்ளனர் என்று நினைக்க முடியவில்லை. ஏன் என்றால் அனைவரும் அவர்களுக்கான் புத்தகங்களில் குறைந்தது ஒன்றையாவது வாங்கத்தான் செய்தனர். அதைப் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
புத்தகம் வாசிக்கும் போது மட்டுமே நாம் அதோடு இணைத்து அந்த காலத்துக்கே சென்று விடுவோம். வரலாற்று நாவல்கள் வாசிக்கும் போது பிந்தைய காலத்துக்கே நம் கற்பனை குதிரை சென்று விடும். படமாக பார்க்கும் பொழுது கிடைக்காத ஒரு அனுபவம் படிக்கும் பொழுது கிடைக்கும். அதனால் அனைவரும் வாசிக்கப் பழகுங்கள்.
இன்று நாம் விஞ்ஞான உலகத்தில் எத்தனையோ முன்னேற்றம் வந்திருந்தாலும் நிறைய நல்ல விசயங்களை தொலைத்துவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கர் அவர்கள் கூறியது "யாரிடமாவது நீ என்ன படம் பார்த்தாய் அல்லது எங்கே சென்றாய் இன்று கேட்டால் உடனே பதில் வந்து விடும். ஆனால் சமீபத்தில் வாசித்த புத்தகம் எது இன்று கேட்டால் சொல்ல முடியாது". எவ்வளவு அழகான உண்மை. அனைவர் வீடுகளிலும் இன்று ஷோ கேஸ், டிவி மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்தும் இருக்கும். ஆனால் லைப்ரரி இருப்பது மிகவும் அரிது. போன தலை முறையினர் வாசித்த அளவு இந்த தலை முறையினர் வாசிப்பது இல்லை. காரணம் பெற்றவர்கள் தான், ஆம் இன்று அலுவலக வேலை மற்றும் டிவி க்குள் முடங்கி விடுகிறோம்.
இதுபோன்ற கண்காட்சி மூலமாக மாற்றம் கண்டிப்பாக வந்தே தீரும்.
நான் கேட்டவை - 2 வெள்ளைப்பூக்கள்
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே , தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில்
காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும்
கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ
எங்கு சிறு குழந்தை
தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ வெள்ளை நிலவே
எங்கு மனித இனம்
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளை குயிலே
Tuesday, January 11, 2011
மிளகுப் பால்
தேவையான் பொருட்கள் :
பால் | 1 கப் |
மிளகு | 5 |
மஞ்சள் தூள் | ½ டீ ஸ்பூன் |
சர்க்கரை / பனை வெல்லம் / பனக்கற்கண்டு | 1 டேபிள் ஸ்பூன் |
செய்முறை:
1. மிளகை ஒன்று இரண்டாக பொடி செய்து வைக்கவும்.
2. பொடித்த மிளகு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரையை காய்ச்சிய பாலுடன் நன்கு கலக்கவும்.
3. பின்பு பாலை நன்கு சூடு செய்யவும். சூடாகப் பருகவும்.
குறிப்பு:
மிளகுப் பாலை சூடாகப் பருகினால் இருமல் மற்றும் நெஞ்சு சளி சரியாகும்.
நான் கேட்டவை - 1 - என்னமா தோழி....
இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல். காலைப்பனி படத்தில் இருந்து என்னம்மா தோழி பாடல் . குழந்தை பொம்மையை தொலைத்துவிட்டு தேடுவது போன்ற பாடல் . பாடல் இசை மிகவும் நன்றாக இருக்கின்றது.
என்னம்மா தோழி பாடல் வரிகள் - படம் : காலைப்பனி
என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்
தல வாரி பின்னி பூக்கள்
வைத்து புது சட்டை போட்டு விட்டு
அய்பசி மாசம் காவேரி ஸ்நானம்
பொம்மைய வாங்கி வந்தேன்
தாலாட்டு நான் பாட கண் மூட மாட்டியோ
மறைந்த போதும் மனதில் என்னும்
மலரோடு பேசும் மழைலை கீதம்
என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்
மரணம் இல்லா வரம் கேட்டு மறு
ஜென்மம் ஒன்று இருந்தால் மாறி விடும்
முகம் மதியோ உடல் நதியோ
மெல்லிய கை விரல்கள் புல்வெளியோ
காலை பொழுதெல்லாம் காத்திருக்கும்
இவள் விழி காணமல் களை இழக்கும்
என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்
Sunday, January 9, 2011
Saturday, January 8, 2011
ஆரஞ்சு ஜூஸ்
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு | 2 |
தேன் | 2 டேபிள் ஸ்பூன் |
சர்க்கரை | 1 டேபிள் ஸ்பூன் |
ஐஸ் கட்டிகள் | 5 |
செய்முறை :
1. ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து சுளைகளை தனியாக எடுக்கவும்.
2. சுளைகளில் உள்ள விதைகளை நீக்கவும்.
3. மிக்ஸ்யில் விதைகளை நீக்கிய சுளைகள், தேன், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்.
4. பின்பு ஜல்லடையில் வடித்து விட்டு ஜில்என்று பரிமாறவும்.
கோயில் யானை !
அட இது நம்ம யனையார் தானுங்க. ஒரு முறை கோயிலுக்கு போய் இருந்த பொழுது என்னை மட்டும் போட்டோ எடுக்க மாடியானு கேட்டாக . சரின்னு யானைஜியை சந்தோசப் படுத்துவோமேனு எடுத்தது.
Friday, January 7, 2011
ஜோக்ஸ் - 3
?
?
?
?
?
?
?
ஏன்னா அவனுக்கு ஊமைக் காயம்.
ஹ ஹ ஹ ஹா ...........
திருப்பாவை
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிடேழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளைத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல ஏற்ளுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப்பறை கொண்டு
பாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.
தூபங் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்;
'மாமீர்' அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் ! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதாராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப்பெண் டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் சென்ற
மனதுக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில் லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்!
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் ,
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பின காண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்!
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்!
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்,
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்!
சில்லென் றலையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுள் கட்டுரைகள், பண்ண்டேஉன் வாயறிதும்!
'வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக!
ஒல்லை நீ போதாய்; உனக்கென்ன வேறுடையே?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்த்தென்னிக்கொள்;
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்!
கோயில் காப் பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழுப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ, ரெம்பாவாய்!
எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்!;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!
நந்த கோ பாலன் மருமகளே ! நப்பினாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயலினங்கள் கூவின காண்!
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்,
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்,
வைத்துக்கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும்; திலேல வொட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்!
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்!
கப்பம் தவிர்க்கும் கலியோ! துயிலேழாய்!
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலேழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலேழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்!
மாற்றாதே பால்சொரியும் வள்ளர் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப் பெய்தோம்!
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போல,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுக்கொண் டென்கள்மேல் நோக்குதி!
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!
மாறி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வீரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே, நீபூவைப்பூ வண்ணா! உன்
கோயினின் ரிங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனதிலிருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!
தென்றன்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எடுத்தாய்! குணம் போற்றி!
குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோ ரெம்பாவாய்!
ஒருத்தி மகனாய் ஒளிந்து வளரத்
தரிக்கலா னாகித் தான்தீங்க நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்யாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்,
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள், போய்ப்பாடு டையனவே
சாலப் பெரும்பறையே, பல்லான் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே விதானமே,
ஆலின்இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
பாடிப் பறை கொண்டு யம்பெறு சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்,
ஆடை உடுப்போம், அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒளியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!
பொற்றா மரையடியே போட்டரும் பொருள்கேளாய்;
பெற்றம்மேய்த் துன்னும் குளத்தில் பிறந்து நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இவற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் எழேல் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
திங்கள் திருமுகத்துச் சேயிஎளையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!