Thursday, January 27, 2011

ஆத்திசூடி - 25 -50

26. இலவம் பஞ்சில் துயில்.
    பஞ்சு மெத்தயில் தூங்கு.

27. வஞ்சகம் பேசேல்.
    வஞ்சகமான சொற்களைப் பேசாதே.

28. அழகு அலாதன செயேல்.
    பெருமை தாராத செயல்களைச் செய்யாதே.

29. இளமையில் கல்.
    இளமைப் பருவத்திலேயே கல்வியைக் கற்க.

30. அரனை மறவேல்.
    சிவபெருமானை மறவாமல் வழிபடு.

31. அனந்தல் ஆடேல்.
    காலையில் நீண்ட நேரம் தூங்காதே.

32. கடிவது மற.
    கடுமையாகப் பேசுவதை மறந்துவிடு.

33. காப்பது விரதம்.
    பிறர்க்குத் தீங்கு வராமல் காப்பதே விரதம்.

34. கிழமைப் பட வாழ்.
    பிறர்க்கு உரிமை கொண்டு நல்லது செய்து வாழ்க.

35. கீழ்மை அகற்று.
    கயமைத்தன்மையை நீக்கு.

36. குணமது கைவிடேல்.
    நல்ல குணங்களை கைவிடாதே.

37. கூடிப் பிரியேல்.
    பிறரிடம் கூடிப் பழகியபின் பிரியாதே.

38. கெடுப்பது ஒழி.
    பிறரைக் கெடுப்பதை விட்டு விடு.

39. கேள்வி முயல்.
    நல்லனவற்றைக் கேட்பதில் முயற்சி செய்க.

40. கைவினை கரவேல்.
    தெரிந்த தொழிலை மறைக்காதே.

41. கொள்ளை விரும்பேல்.
    பிறர் பொருளைத் திருடி வாழ விரும்பாதே.

42. கோதாட் டொழி.
    தீமை தரும் விளையாட்டுக்களை நீக்கு.

43. கௌவை அகற்று.
    பிறரைப் பற்றிப் பழிசொல்வதை நீக்கு.

44. சக்கரநெறி நில்.
    அரசின் ஆணைப் படி நடந்து கொள்.

45. சான்றோர் இனத்திரு.
    அறிவில் சிறந்த சான்றோர்களின் இனத்தோடு சேர்ந்திரு.

46. சித்திரம் பேசேல்.
    பொய்யானவற்றை மெய் என்று நம்பும்படி பேசாதே.

47. சீர்மை மறவேல்.
    சிறந்த பண்புகளை மறவாதே.

48. சுளிக்கச் சொல்லேல்.
    கேட்போர் முகம் சுளிக்கும்படி தவறானவற்றைப் பேசாதே.

49. சூது விரும்பேல்.
    சூதாடுவதை எக்காலத்துக்கும் விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்.
    செய்யும் வேலைகளை நன்றாகச் செய்.

ஆத்திசூடி 1 முதல் 25 வரை காண இங்கே கிளிக் செய்யவும்.

   
                                      தொடரும்.......

Wednesday, January 26, 2011

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!


Tuesday, January 25, 2011

ஆத்திசூடி


     இது ஒவையார் அருளிய ஆத்திசூடி. நமக்கு 10 முதல் 15 ஆத்திசூடி தான் தெரிந்து இருக்கும். ஆனால் ஒவையார் அருளிய ஆத்திசூடி மொத்தம் 109. இந்த ஆத்திசூடிகளை பொருளுடன் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. அறம் செய விரும்பு.
   நல்ல தருமத்தைச் செய்ய ஆசைப்படு.

2. ஆறுவது சினம்.
   அடக்கிக் கொள்ள வேண்டியது கோபம்.

3. இயல்வது கரவேல்.
   கொடுப்பதற்கு முடிந்த பொருளை மறைக்காமல் கொடு.

4. ஈவது விலக்கேல்.
  மற்றொருவர்க்குப் பிறர் கொடுப்பதைத் தடுக்காதே.

5. உடையது விளம்பேல்.
   உன்னிடத்தில் இருக்கும் உடைமைப்பொருள்களை வெளிப்படையாகப் பிறரிடத்தில் பேசாதே.

6. ஊக்கமது கைவிடேல்.
   காரியத்தில் உறுதியான மனவலிமையைக் கைவிடாதே.

7. எண் எழுத்து இகழேல்.
   கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் கற்றுக்கொள்.

8. ஏற்பது இகழ்ச்சி.
   பிறரிடம் யாசிப்பது பெருமைக்குத் தாழ்வு ஆகும்.

9. ஐயம் இட்டு உண்.
   பசித்தவர்க்கு உணவு கொடுத்தபின் உண்பாயாக.

10. ஒப்புரவு ஒழுகு.
    உலக மக்கள் நிலைமையறிந்து நடந்து கொள்.

11. ஓதுவது ஒழியேல்.
   படிப்பதை எக்காலத்துக்கும் விட்டுவிடாதே.

12. ஒளவியம் பேசேல்.
   பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகம் சுருக்கேல்.
   தானியங்களை அளவு குறைத்துப் பிறர்க்கு விற்காதே.

14. கண்டொன்று சொல்லேல்.
   பேசும் போது கண்டபடி பேச்சை மாற்றிப் பேசாதே.

15. ஙப்போல் வளை.
   போல நீ சிறந்தவனாக இருந்து உன் இனத்தைச் சுற்றி வளைத்துக் காப்பாயாக.  

   ங என்ற எழுத்து வரிசையில் ஙி,ஙீ...ஙௌ முதலிய எழுத்துக்கள் எங்கும் வருவதில்லை. அங்ஙனம், இங்ஙனம், அங்கு, இங்கு முதலிய சொற்களில் ‘ஙதனியாகவும் ‘ங்என்று புள்ளி பெற்றும் வருகின்றன. ‘ஙஎன்ற ஒரே எழுத்திற்காக ஏனைய ‘ஙி’, ‘ஙீ’, ‘ஙு’, ‘ஙூமுதலிய எழுத்துக்களை வைத்துக் கொண்டுள்ளோம். ‘ஙஏனைய தன் இன எழுத்துக்களைக் காப்பாற்றி வருகின்றது. அதுபோல் நீ சிறந்தவனாக இருந்து உன் இனத்தைச் சுற்றி வளைத்துக் காப்பாயாக.  

16. சனி நீராடு.
   குளிர்ந்த நீரில் குளிப்பாயாக.

17. ஞயம்பட உரை.
   அனைவரிடமும் இனிமையாகப் பேசு.

18. இடம்பட வீடு எடேல்.
    பிறர்க்கு இடையூறாகப் பெரிதாக வீட்டைக் கட்டாதே.

19. இணக்கம் அறிந்து இணங்கு.
    நல்லவரிடத்தில் நட்புக் கொள்.

20. தந்தை தாய்ப் பேண்.
    பெற்றோர்களை மதித்துக் காப்பாற்று.

21. நன்றி மறவேல்.
    பிறர் செய்த உதவியை மறக்காதே.

22. பருவத்தே பயிர் செய்.
    உரிய காலத்தில் காரியங்களைச் செய்.

23. மன்று பறித்து உண்ணேல்.
    நீதி மன்றத்தில் கையூட்டுப் பெற்று வாழாதே.

24. இயல்பு அலாதன செயேல்.
    நல்லறிவிற்கு மாறான காரியங்களைச் செய்யாதே.

25. அரவம் ஆட்டேல்.
    வீண் ஆரவாரமான காரியங்களைச் செய்யாதே.

                                           தொடரும்...............


Monday, January 24, 2011

பூக்கோலம் - 1


Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்துக்கள் - 2011

Thursday, January 13, 2011

பொங்கல் கோலங்கள்

கோலம் - 1

கோலம் 2
கோலம் 3


மேலும் கோலங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.



Wednesday, January 12, 2011

சென்னை புத்தகக் காட்சி - 2011


சென்னையில் புத்தக கண்காட்சி ஆண்டு தோறும் நடை பெறுகின்றது. இந்த வருடம் ஜனவரி 4 முதல் 17 வரை நடை பெறுகின்றது.மேலும் மாலை நேரங்களில் சான்றோர்களின் உரைகளும் நடை பெறுகின்றன.   சென்ற ஞாயிறு அன்று நானும் சென்று இருந்தேன். அதை பற்றி சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். கிட்டத்தட்ட 463 புத்தக கடைகள் இருந்தன. 3 நுழைவு வாயில்கள் இருந்தன. இன்று புத்தகம் வாசிப்பது என்பது வெகுவாக குறைந்து விட்ட ஒன்று என நான் நினைத்தேன். ஆனால் அங்கு வந்த கூட்டத்தைபார்க்கும் பொழுது நாம் நினைத்தது தவறோ என எண்ணத் தோன்றுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் வந்து இருந்தனர். பொழுது போக்கிற்காக வந்துள்ளனர் என்று நினைக்க முடியவில்லை. ஏன் என்றால் அனைவரும் அவர்களுக்கான் புத்தகங்களில் குறைந்தது ஒன்றையாவது வாங்கத்தான் செய்தனர். அதைப் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும்  இருந்தது.

புத்தகம் வாசிக்கும் போது மட்டுமே நாம் அதோடு இணைத்து அந்த காலத்துக்கே சென்று விடுவோம். வரலாற்று நாவல்கள் வாசிக்கும் போது பிந்தைய காலத்துக்கே நம் கற்பனை குதிரை சென்று விடும். படமாக பார்க்கும் பொழுது கிடைக்காத ஒரு அனுபவம் படிக்கும் பொழுது கிடைக்கும். அதனால் அனைவரும் வாசிக்கப் பழகுங்கள்.

இன்று நாம் விஞ்ஞான உலகத்தில் எத்தனையோ முன்னேற்றம் வந்திருந்தாலும் நிறைய நல்ல விசயங்களை தொலைத்துவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கர் அவர்கள் கூறியது "யாரிடமாவது நீ என்ன படம் பார்த்தாய் அல்லது எங்கே சென்றாய் இன்று கேட்டால் உடனே பதில் வந்து விடும். ஆனால் சமீபத்தில் வாசித்த புத்தகம் எது இன்று கேட்டால் சொல்ல முடியாது". எவ்வளவு அழகான உண்மை. அனைவர் வீடுகளிலும் இன்று ஷோ கேஸ், டிவி மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்தும்  இருக்கும். ஆனால் லைப்ரரி இருப்பது மிகவும் அரிது. போன தலை முறையினர் வாசித்த அளவு இந்த தலை முறையினர் வாசிப்பது இல்லை. காரணம் பெற்றவர்கள் தான், ஆம் இன்று அலுவலக வேலை மற்றும் டிவி க்குள் முடங்கி விடுகிறோம்.

இதுபோன்ற கண்காட்சி மூலமாக மாற்றம் கண்டிப்பாக வந்தே தீரும்.

நான் கேட்டவை - 2 வெள்ளைப்பூக்கள்





வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே , தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறு முதல் சிரிப்பில்

காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ

கோடி கீர்த்தனமும்
கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ


எங்கு சிறு குழந்தை
தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ வெள்ளை நிலவே

எங்கு மனித இனம்
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளை குயிலே
 

Tuesday, January 11, 2011

மிளகுப் பால்


தேவையான் பொருட்கள் :

பால்

1 கப்

மிளகு

5

மஞ்சள் தூள்

½ டீ ஸ்பூன்

சர்க்கரை / பனை வெல்லம் / பனக்கற்கண்டு

1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

1.
மிளகை ஒன்று இரண்டாக பொடி செய்து வைக்கவும்.


2.
பொடித்த மிளகு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரையை காய்ச்சிய பாலுடன் நன்கு கலக்கவும்.

3. பின்பு பாலை நன்கு சூடு செய்யவும். சூடாகப் பருகவும்.

குறிப்பு:
மிளகுப் பாலை சூடாகப் பருகினால் இருமல் மற்றும் நெஞ்சு சளி சரியாகும்.

நான் கேட்டவை - 1 - என்னமா தோழி....



இந்த பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடல். காலைப்பனி படத்தில் இருந்து என்னம்மா தோழி பாடல் . குழந்தை பொம்மையை தொலைத்துவிட்டு தேடுவது போன்ற பாடல் . பாடல் இசை மிகவும் நன்றாக இருக்கின்றது.

என்னம்மா தோழி பாடல் வரிகள் - படம் : காலைப்பனி

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

தல வாரி பின்னி பூக்கள்
வைத்து புது சட்டை போட்டு விட்டு
அய்பசி மாசம் காவேரி ஸ்நானம்
பொம்மைய வாங்கி வந்தேன்
தாலாட்டு நான் பாட கண் மூட மாட்டியோ
மறைந்த போதும் மனதில் என்னும்
மலரோடு பேசும் மழைலை கீதம்

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

மரணம் இல்லா வரம் கேட்டு மறு
ஜென்மம் ஒன்று இருந்தால் மாறி விடும்
முகம் மதியோ உடல் நதியோ
மெல்லிய கை விரல்கள் புல்வெளியோ
காலை பொழுதெல்லாம் காத்திருக்கும்
இவள் விழி காணமல் களை இழக்கும்

என்னம்மா தோழி பொம்மைய காணும்
நான் என்ன செய்ய போறேன்

Sunday, January 9, 2011

அதிர்ச்சி!!!

Saturday, January 8, 2011

அழகான அணில் விளம்பரம்

ஆரஞ்சு ஜூஸ்


தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு

2

தேன்

2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை

1 டேபிள் ஸ்பூன்

ஐஸ் கட்டிகள்

5


செய்முறை :
1.
ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து சுளைகளை தனியாக எடுக்கவும்.

2.
சுளைகளில் உள்ள விதைகளை நீக்கவும்.

3. மிக்ஸ்யில் விதைகளை நீக்கிய சுளைகள், தேன், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்.

4. பின்பு ஜல்லடையில் வடித்து விட்டு ஜில்என்று பரிமாறவும்.

கோயில் யானை !


அட இது நம்ம யனையார் தானுங்க. ஒரு முறை கோயிலுக்கு போய் இருந்த பொழுது என்னை மட்டும் போட்டோ எடுக்க மாடியானு கேட்டாக . சரின்னு யானைஜியை சந்தோசப் படுத்துவோமேனு எடுத்தது.

Friday, January 7, 2011

ஜோக்ஸ் - 3

ஒருத்தனுக்கு கால்ல அடி பட்டுடுச்சு . அவன் டாக்டர் கிட்ட போறான். டாக்டர் என்னனு கேக்கறாரு . ஆனா அவன் ஒண்ணுமே பேசல, ஏன்?
?
?
?
?
?
?
?
ஏன்னா அவனுக்கு ஊமைக் காயம்.

ஹ ஹ ஹ ஹா ...........

திருப்பாவை

1. "கார்மேனிச் செங்ககண்ணனே"
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர்! போதிமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆயர்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்! கார்மேனிச் செங்கண் கதிர்மயம் போல்முகத்தான்! நாரயணனே, நமக்கே பறைதருவான்! பாரோர் புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்!

2. "பாற்கடல் பரமனே!"
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிடேழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!

3. "ஓங்கி உலகளந்த உத்தமனே"
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல்உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைதேலோ ரொம்பாவாய்!

4. "ஆழி மழைக் கண்ணா!"
ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைரவேல்; ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைந்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிந்தேலோ ரெம்பாவாய்!

5. "வடமதுரை மைந்தனே!"
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்ததா மோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர்தூ வித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!

6. "துயிலமர்ந்த வித்தே!"
புள்ளும் சிலம்பினகாண்! புள்ளரையின் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளைத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல ஏற்ளுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

7. நாராயண மூர்த்தியே! கேசவனே!
கீககீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!

8. "தேவாதி தேவனே!"
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப்பறை கொண்டு
பாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்.

9. "மாதவனே! வைகுந்தனே!"
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்;
'மாமீர்' அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

10. ஸ்ரீமந் நாராயணனே!
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் ! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!

11. " முகில் வண்ணனே"
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதாராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப்பெண் டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

12. "மனதுக்கு இனியானே!"
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் சென்ற
மனதுக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில் லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்!

13.கண்ணா! கார்முகில் வண்ணா!
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் ,
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பின காண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்!

14. "பங்கயக் கண்ணனே!"
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்!
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்,
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்!

15. "வல்லானே! மாயனே!"
எல்லே! இளங்கிளியே! இன்னன் உறங்குதியோ!
சில்லென் லையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுள் கட்டுரைகள், பண்ண்டேஉன் வாயறிதும்!
'வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக!
ஒல்லை நீ போதாய்; உனக்கென்ன வேறுடையே?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்த்தென்னிக்கொள்;
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்!

16. மாயனே! மணிவண்ணனே!
நாயக னாய் நின்ற நந்தகோ பனுடைய
கோயில் காப் பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழுப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ, ரெம்பாவாய்!

17 ."உம்பர் கோமானே!"
அம்பரமே, தண்ணீரே, சோறோ அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்!;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

18. நப்பின்னை நாயகனே!
உந்து மதகளிற்றன், ஓடாத தோள் வலியன்,
நந்த கோ பாலன் மருமகளே ! நப்பினாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயலினங்கள் கூவின காண்!
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

19. திருமலர் மார்பா!
குத்து விளகெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்,
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்,
வைத்துக்கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும்; திலேல வொட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்!
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்!

20. கொடுக்கும் விமலா!
முப்பத்து மூவர் அமர்க்கும் முன்சென்று!
கப்பம் தவிர்க்கும் கலியோ! துயிலேழாய்!
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலேழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலேழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்!

21. "தோற்றமாய் நின்ற சுடரே!"
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளர் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

22. "திருவின் நாயகனே!"
அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப் பெய்தோம்!
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போல,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுக்கொண் டென்கள்மேல் நோக்குதி!
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

23.பூவைப் பூவண்ணா!

மாறி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வீரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே, நீபூவைப்பூ வண்ணா! உன்
கோயினின் ரிங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனதிலிருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!


24. திருவடி போற்றி!
அன்றிவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!
தென்றன்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எடுத்தாய்! குணம் போற்றி!
குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோ ரெம்பாவாய்!


25."நின்ற நெடுமாலே!"
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளிந்து வளரத்
தரிக்கலா னாகித் தான்தீங்க நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்யாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


26. ஆலிலையாய் அருளாய்!
மாலே! மணிவண்ணா! மார்கழி நீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்,
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள், போய்ப்பாடு டையனவே
சாலப் பெரும்பறையே, பல்லான் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே விதானமே,
ஆலின்இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!


27. "சீர்க் கோவிந்தனே !"
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யம்பெறு சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்,
ஆடை உடுப்போம், அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


28. "இறைவா! நீ தாராய்!"
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந் துஉண்போம்!
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒளியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!

29."உனக்கே ஆட்செய்வோம்!"
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன்
பொற்றா மரையடியே போட்டரும் பொருள்கேளாய்;
பெற்றம்மேய்த் துன்னும் குளத்தில் பிறந்து நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இவற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் எழேல் பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

30. 'திருமால் திருவருளே' இன்பம்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை,
திங்கள் திருமுகத்துச் சேயிஎளையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!